அசாமில் கொடியேற்றும் போது அடுத்த‌டுத்து மயங்கி விழுந்த 13 மாணவிகள் - சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி

அசாமில் கொடியேற்றும் போது அடுத்த‌டுத்து மயங்கி விழுந்த 13 மாணவிகள் - சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி

அசாமில் மோரிகான் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நீண்ட நேரம் நிற்க வைக்கப்பட்டிருந்த 13 பள்ளி மாணவிகள் அடுத்த‌டுத்து மயங்கி விழுந்த‌னர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்த‌தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அடுத்த‌டுத்து மயங்கி விழுந்த‌தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com