Plane crash | 10 நிமிட தாமதம்... விமானத்தை தவறவிட்டதால் உயிர்பிழைத்த பெண்மணி

x

10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் விமான விபத்தில் இருந்து பெண்மணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். குஜராத் மாநிலம் பருச் பகுதியைச் சேர்ந்த பூமி சவுகான் என்பவர், ​விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர், விமான நிலைய செக்-இன் கேட்டிற்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், அவரை விமானத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பூமி சவுகான், விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்