திருச்செந்தூர் பக்தர்களுக்கு செம அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவில் பிரேக் தரிசனம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேரை இழுத்து தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதலில் திருவண்ணாமலையில் பிரேக் தரிசனம் முறை தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Next Story
