உருகி உருகி காதலித்த காதலி...பல பெண்களுடன் காதலன் உல்லாசம் - 2 முறை கர்ப்பம்... பெண் செய்த விபரீதம்

x

உருகி உருகி காதலித்த காதலி...பல பெண்களுடன் காதலன் உல்லாசம் - 2 முறை கர்ப்பம்... பெண் செய்த விபரீதம்


திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை அருகே உள்ள ஊரை சேர்ந்த நர்சிங் மாணவியும், அதே ஊரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற அர்ஜுனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது, புகைப்படம் எடுப்பது என நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடன் பேசுவதை தவிர்த்ததால் விரக்தியடைந்த மாணவி, வயிற்று வலியால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலன் தொடர்பை துண்டித்ததால் எலிபேஸ்ட் சாப்பிட்டு, மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதலனால் இரண்டு முறை கர்ப்பமானதாகவும், காதலன் அர்ஜுன் வேறு பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அர்ஜுனை கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்