"இனிமேல் அப்படி கூப்பிடாதீர்கள்.." - கண்டிப்பாக கூறிய பிரதமர் மோடி

x

திரு, மாண்புமிகு போன்ற அடைமொழிகளை குறிப்பிட்டு, தன்னை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட வேண்டாமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையொட்டி, பிரதமர் மோடிக்கு கரவொலி எழுப்பி மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவரின் கடின உழைப்பால் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாகவும், இது தனிப்பட்ட வெற்றியல்ல.. கூட்டு வெற்றி என குறிப்பிட்டார். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு ஜாதியினரின் வளர்ச்சிக்காக உழைப்பதோடு, அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்zடார். மக்களின் விருப்பமான தேர்வாக பா.ஜ.கவே இருப்பதாக தெரிவித்த பிரதமர், தெலங்கானா, மிசோரமில் பா.ஜ.க முன்பிருந்ததை விட தனது பலத்தை பன்மடங்கு அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்த மோடி, தேசத்தை கட்டமைக்க மக்கள் தியாகம் செய்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்