

இளம் இயக்குநர் மாதேஷ் கதை எழுதி இயக்கி உள்ள மோகினி என்ற திரில்லர் பேய் படத்தில் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். அழகிய பேயாக நடித்து, இந்த படத்தில் ரசிகர்களை திரிஷா மிரட்டி உள்ளார். சில பல காரணங்களால், ஒரிரு மாதங்கள் தாமதம் ஆன திரிஷாவின் மோகினி திரைப்படம், தடைகளை கடந்து, வருகிற 29 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.