``விஜய்யா வந்து உங்களுக்கு ஃபீஸ் கட்டுவாரு''அலறவிட்ட ADSP.. டிரெண்டாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஏரியூரில் நடைபெற்ற தனியார் பள்ளியின் விளையாட்டு விழாவில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் பங்கேற்றார். அப்போது மாணவர்களிடம் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் என்று அவர் கேட்டபோது, மாணவர்கள் விஜய், நயன்தாரா என்று பதிலளித்தனர். இதையடுத்து எப்போதும் நமது ஹீரோ, ஹீரோயின் தாயும், தந்தையும் மட்டுமே என்று ஏ.டி.எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com