நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ஏ-1 திரைப்படத்தை தடை செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்தை நாராயணன் தயாரித்துள்ளார். திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.