வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .