

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு , நீதிபதி ஆதிகேசவலு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,நடிகர் சங்க தேர்தலில் தலையிட சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். எனவே, பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிடக் கோரினார்.இதனைக் கேட்ட நீதிபதி, வழக்கு நிலுவையில் உள்ளதால் ஓட்டுகளை எண்ண அனுமதிக்க முடியாது என கூறி கோரிக்கையை நிராகரித்தார்.