பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
1931-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகி, சிறுவயதிலேயே சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களில் பங்கேற்றார்.
1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில், என்.டி. ராமராவுடன் இணைந்து நடித்த "சௌகார்"என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் பெயருடன் இணைந்து ‘சௌகார்’ ஜானகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
