நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் திருப்பம் : "கொலை அல்ல - கல்லீரல் நோயால் இறந்தார்"- சிபிஐ

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் திருப்பம் : "கொலை அல்ல - கல்லீரல் நோயால் இறந்தார்"- சிபிஐ
Published on
அவர் கல்லீரல் நோயால் தான் மரணத்தை தழுவியதாகவும் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து மக்களை கவர்ந்த கலாபவன் மணி கடந்த 2016 மார்ச் 6 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரித்து வந்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல எனவும் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் மரணத்தை தழுவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com