"கெணத்த காணோம்" வெற்றி விழா - நன்றி தெரிவித்த யோகி பாபு
"கெணத்த காணோம்" வெற்றி விழா - நன்றி தெரிவித்த யோகி பாபு
“கெணத்த காணோம்“ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் ரசிகர்களுக்கு யோகிபாபு நன்றி தெரிவித்துள்ளார்.
படத்தின் வெற்றியை பார்க்க இயக்குநர் சுரேஷ் சங்கையா உயிருடன் இல்லாதது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும், ஆனால் அவரது நோக்கம் இந்தப் படத்தின் மூலம் என்றும் உயிருடன் இருக்கும் என்றும் யோகி பாபு உணர்வுபூர்வமாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
