களவாணி-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களவாணி-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை
Published on

களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள அந்த படம், வரும் 5ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமக்கு வழங்க வேண்டிய 67 லட்சம் ரூபாய் பணத்தை இயக்குனரும், தயாரிப்பாளருமான சற்குணம் தராமல், பணத்தை வெளியிடக் கூடாது என்று மனுதாரர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் சற்குணத்துக்கு உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com