ஆஸ்கரில் இருந்து வெளியேறியது 'ஜல்லிக்கட்டு'

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது.
ஆஸ்கரில் இருந்து வெளியேறியது 'ஜல்லிக்கட்டு'
Published on

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது.

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படம் ஜல்லிக்கட்டு. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் திரைத்துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்காக இந்த படத்தை இந்தியா பரிந்துரைத்தது. சிறந்த சர்வதேச படங்கள் பிரிவில் இந்த படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஆஸ்கரின் முதல்கட்ட பரிந்துரை பட்டியலில் ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறவில்லை. இதனால் ஆஸ்கர் ரேஸில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது. இது இந்திய சினிமா ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com