"இயக்குநர் ஷங்கருக்கு நான் கடன்பட்டுள்ளேன்" - நடிகர் பாபி சிம்ஹா பெருமிதம்

"இயக்குநர் ஷங்கருக்கு நான் கடன்பட்டுள்ளேன்" - நடிகர் பாபி சிம்ஹா பெருமிதம்
Published on
• இயக்குநர் ஷங்கர் படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக, நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2ம் பாகம் திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசனும் துணை கதாபாத்திரத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிப்பதை பெரும் பாக்கியமாக கருதுவதுடன், அவருக்கு கடன் பட்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com