Director Ranjith Arrest | இயக்குநர் ரஞ்சித் கைது

படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குநர் ரஞ்சித் கைது கேரளாவில் படப்பிடிப்பு தளத்தில் இளம் நடிகையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது செய்யப்பட்டார். ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்துவரும் அந்த நடிகை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் அவரின் புகார் உண்மை என உறுதி செய்யப்பட்டதால், ரகசிய வாக்குமூலம் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து, தொடுபுழாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பிய போது அவரை கைது செய்தனர்...கைது செய்யப்பட்ட ரஞ்சித், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com