படங்கள் மூலம் மட்டுமே கருத்தை வெளிப்படுத்த வேண்டுமா? - மத்திய அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டு உள்ள தேசத் துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படங்கள் மூலம் மட்டுமே கருத்தை வெளிப்படுத்த வேண்டுமா? - மத்திய அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி
Published on

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டு உள்ள தேசத் துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் தற்போது, மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும், பொது வெளியில் பேச கூடாது என கூறுவது ஏற்புடையதல்ல என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com