

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை கிரிஷய்யா என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இதற்கிடையே, இந்த படத்தின் 'எதற்கடி வலி தந்தாய்' என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, டிரெண்டிங்கில் 8வது இடத்தை பிடித்துள்ளது.