தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டியை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி
Published on
தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முகமது அப்துல் என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, சிறுத்தை குட்டியை பிளாஸ்டிக் கூண்டில் வைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. முகமது அப்துலிடம் விசாரித்த போது நண்பர் கேட்டதால் சிறுத்தை குட்டியை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ள விமான நிலைய அதிகாரிகள் முதல்முறையாக சிறுத்தை குட்டி கடத்தி வரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். அதை மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com