பிறந்ததில் இருந்து இவ்வளவு நாள் தாம் வீட்டில் இருந்தது இல்லை என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தானா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,பதினெட்டு வயதில் இருந்தே தமது வாழ்க்கை மாரத்தான் ஓட்டம் போல தான் இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் . பள்ளி பருவத்தில் இருந்தே ஹாஸ்டலில் தான் இருந்ததாகவும், தற்போது ஊரடங்கு காரணமாக தான் வீட்டிலேயே இவ்வளவு நாள் இருப்பதாகவும் அவர் கூறினார். குடும்பம் தான் என்றுமே மகிழ்ச்சியான இடம் என்றும் அவர் கூறியுள்ளார்.