

நடிகர் விசாலின் 28வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் நேற்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்திற்கான தலைப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் 'இரும்புத் திரை 2' என்ற பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடந்தது. இப்படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.