ஒரே ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி..! விழிகளை அகல வைத்த சென்னை சுங்கத்துறை

x

சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை சுங்கத்துறை அலுவலகத்தில் சர்வதேச சுங்க நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ், கடந்த ஓராண்டில் சென்னை சுங்கத்துறை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். இது கடந்த நிதி ஆண்டு வருவாயை காட்டிலும் 13 புள்ளி 29 சதவீதம் அதிகம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டில் 235 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல் நபர்களை பிடிக்க உறுதுணையாக உள்ள விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்