NDA | BJP | PM Modi | பிரதமருடன் மேடை ஏறும் முன்னே முக்கிய முடிவு - NDA கூட்டணியில் அதிரடி ட்விஸ்ட்
#BREAKING || NDA | BJP | PM Modi | பிரதமருடன் மேடை ஏறும் முன்னே முக்கிய முடிவு - NDA கூட்டணியில் அதிரடி ட்விஸ்ட் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனியார் தங்கும் விடுதிக்கு வருகை - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தகவல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மாலை மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமமுக பொதுச் செயலாளர் டி. டி.வி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தங்கும் விடுதிக்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து மதிய உணவு அருந்தியபின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
