Chennai Trains | ஆயிரத்தெட்டு பிரஷரில் காலை பரபரப்பில் வரும் ரயில் பயணிகளை கடுப்பாக்கும் செய்தி
Chennai Trains | ஆயிரத்தெட்டு பிரஷரில் காலை பரபரப்பில் வரும் ரயில் பயணிகளை கடுப்பாக்கும் செய்தி #chennai #fog #wheatherreport சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.... மின்சார ரயில்கள் 15 முதல் 20 நிமிட இடைவெளியில் காலதாமதமாக இயக்கம் அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் பனிமூட்டம் நீடித்து வருவதால் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் நிறைவு ரயில்களின் இயக்கம் தாமதமாகியுள்ளது. அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் மின்சார ரயில்கள் 15 முதல் 20 நிமிட காலதாமதத்தில் இயக்கப்படுகிறது. அரக்கோணம் சென்னை கடற்கரை, திருவள்ளூர் பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. அதேபோல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் காலதாமதமாக இயக்கப்படுகிறது.
