நடிகர் விக்ரம் மீது பரபரப்பு புகார்

x

இளைஞர்கள் மத்தியில் நடிகர் விக்ரம், தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார் என சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. அதில் நடிகர் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்வதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ.செல்வம், காவல்துறைக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சமூக வலைதளங்களில் கத்தியுடன் இருக்கும் இளைஞர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுப்பதை வரவேற்பதாகவும், இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்