மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025)
- திருப்பரங்குன்றம் மலை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள்
- போதைப்பொருள் தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப், ஜான் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு......
- போர் நிறுத்தம் அறிவித்த நிலையில் ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டு...
- வரும் 27, 28 ஆகிய தேதிகளில் கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு...
- திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில், ஐந்து கோடி ரூபாய் சொத்து பத்திரத்தை காணிக்கையாக போட்ட முன்னாள் ராணுவ வீரர்...
- ஆவடி அருகே ரயிலில் சாகசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்... ரீல்ஸ் மோகம் தலைக்கேறி சாகசம் செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை...
- பெரியாரையும், அண்ணாவையும் பகைத்தவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்த வரலாறு இல்லை...
- மதுரை முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை.....
- சேலம் அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல்...
- புதுச்சேரியில் பொதுப்பணித் துறை அலுவலகம் மீது முன்னாள் ஊழியர்கள் தக்காளி வீசியதால் சலசலப்பு...
Next Story
