மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
பிராந்திய ராணுவத்தை பயன்படுத்த ராணுவ தளபதிக்கு, 2028ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை கூடுதல் அதிகாரம்...
ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆந்திர ராணுவ வீரர் முரளி நாயக் உயிரிழப்பு...
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு...
டிரோனை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்...
இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட பயன்படுத்தப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை...
பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக எல்லையோர கிராம பகுதிகளில் கடும் சேதம்...
அரியானா மாநிலத்தில் இன்று இரவு தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுப்பிரிவு தகவல்...
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி, மத்திய தொழிற் பாதுகாப்பு படை டி.ஜி.பி ஆலோசனை...
நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பு குறித்து, சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை...
கடல்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரபிக்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய கடற்படை...
காஷ்மீரில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தொடர் முயற்சி....
ஜம்மு காஷ்மீரில் நிலைமை தற்போது சீராக உள்ளதாக அங்கு தங்கி பயிலும் தமிழக மாணவர்கள் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி...
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஒப்புதல்...
பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சண்டிகரில் ஏர் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்...
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி...
தொடரும் போர்ச்சூழலுக்கு மத்தியில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அதிமுகவினருக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்...
நடப்பு ஐபிஎல் தொடர், ஒரு வார காலத்திற்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு...
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க வாய்ப்பு...
தேசம்தான் முதன்மை... மற்றவைக்கு காத்திருக்கலாம்...
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம்...
பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து...