"மணமணக்கும் வாழை இலை சாப்பாடு"ருசித்து சாப்பிட்ட வெளி நாட்டு செஸ் வீரர்

x

ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகத்திற்கு சென்ற செஸ் வீரர்கள், ரசம், சாம்பார், பொறியலுடன் தலை வாழை இலை சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசித்தனர். பின்னர், அக்குழுவில் வந்து சாப்பிட்ட ஜெர்மன் நாட்டு செஸ் வீரர் "கீர்ட்வான் டேர் வெல்டே" என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நல்ல உணவு சாப்பிட்டதாக பாராட்டி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்