டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 நாடுகளுக்காக சதம்... ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் சாதனை

x

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற அரிய சாதனையை ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் நிகழ்த்தி இருக்கிறார்.

ஜிம்பாப்வேவில் பிறந்தவரான கேரி பேலன்ஸ், இங்கிலாந்து அணிக்காக கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை ஆடி, நான்கு டெஸ்ட் சதங்கள் அடித்தார்.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ள பேலன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் அடித்து உள்ளார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்காக டெஸ்ட்டில் சதம் அடித்த கெப்ளர் வெஸல்ஸ்-க்குப் பிறகு, இரு நாடுகளுக்காக சதமடித்த வீரர் என்ற பெருமையை கேரி பேலன்ஸ் பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்