இரவில் அசால்ட்டாக வந்து பைக்யை திருடிய இளைஞர்கள்.. - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, 2 பேர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதன்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், காலை தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது, இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்த மதன் குமார், போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்