"கைய புடிச்சி நீங்க அடிக்க வரலையா?... போலீசாரிடத்தில் இளைஞர்கள் வாக்குவாதம் - வெளியான வைரல் வீடியோ

x

செங்கல்பட்டில் கவர்னர் வருகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் கவர்னர் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிளாம்பாக்கம் அருகே சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு உணவருந்த வந்த இளைஞர்களின் காரை போலீசார் ஓரமாக நிறுத்த வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, கவர்னர் வந்த சென்றதன் பின்பு, இளைஞர்களிடம் மீண்டும் சென்ற போலீசார் அவர்களுடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்