யூடியூப் பார்த்து ஏடிஎம்-மில் இளைஞர்கள் செய்த செயல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

கர்நாடகா எல்லையான திருபாளையா என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கட்டட வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் 5 பேரும் யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட திட்டமிட்டனர்.

அதன்படி, செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பினர்.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, நேற்று 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்