வாகனத்தில் பேரணியாக சென்ற இளைஞர்கள் செய்த அலப்பறை - இணையத்தில் பரவும் வீடியோ

x

கேரளாவில் உலக கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக நடந்த வாகன பேரணியில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலகலமாக தொடங்கிய நிலையில், அதை வரவேற்கும் விதமாக கொச்சியில் தனியார் கிளப் மூலம் வாகன பேரணி நடத்தப்பட்டது.

பேரணியில், வாகன ஓட்டும் வயதை பூர்த்தி அடையாத இளைஞர்கள் சிலர் வாகனங்களை ஆபத்தான முறையில் ஓட்டி சென்றனர்.

மேலும், பல இளைஞர்கள் ஆட்டோவில் ஸ்டண்ட் செய்தும், கார் கதவுகளை திறந்தும் ஆபத்தான முறையில் பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், 50 வாகன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்