தீரன் சின்னமலை பிறந்த நாள் ஊர்வலம்- பைக்கில் அலப்பறை செய்த இளைஞர்கள்..தடுத்த போலீசாருடன் வாக்குவாதம்

x

ஈரோடு அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற இருசக்கர வாகன ஊர்வலத்தின்போது, போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீரன் சின்னமலையின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் உள்ள மணிமண்டபம் சாலையில் ஊர்வலமாக வந்த கல்லூரி மாணவர்கள், அதிவேகத்துடன் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். தடுத்து நிறுத்திய காவல் துறையினரிடம், அந்த இளைஞர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்