மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்..அடித்து துவைத்த பொதுமக்கள் - தாம்பரம் அருகே பரபரப்பு

x

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலை சுண்ணாம்பு கால்வாய் அருகே, இரவில் அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது வேகமாக மோதியது. இதில் நின்று கொண்டிருந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது. காரில் இருந்து ஏர் பலூன் வெளியேறியதால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், காரில் இருந்த நபர் மதுபோதையில் தள்ளாடியபடி வெளியே வந்தார். மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மது போதையில் இருந்த நபரை சரமாரியாக தாக்கி பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயங்களுடன் இருந்த நபரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை பெற்ற அந்த நபர், மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்ற நிலையில், வாகன எண்ணை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்