பத்மநாபபுரம் அரண்மனை சாலையில் டார்ச் லைட் அடித்து சாவகாசமாக பைக்கை திருடிய இளைஞர்

x

பத்மநாபபுரம் அரண்மனை சாலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் இரவு தன் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், அந்த பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட கிருஷ்ணன், கண்ணிமைக்கும் நேரத்தில் திருடன் பைக்கில் பறந்துள்ளார்... அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மர்ம நபரை தேடியுள்ளார். பைக்கைத் திருடிய இளைஞர் வழி தெரியாமல் பதற்றத்தில் முட்டுச் சந்தில் முட்டிக் கொள்ளவே, வசமாக பொதுமக்களிடம் சிக்கியுள்ளார்... அந்த திருடனை சுற்றி வளைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், திருடன் டார்ச் லைட் அடித்துக் கொண்டே பைக்கை சாவகாசமாக திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்