கல்லூரி மாணவியை காரில் கடத்திய இளைஞர் - திருவாரூரில் பரபரப்பு

x

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து, முத்துப்பேட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, காரில் வந்த இளைஞர் ஒருவர், மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் புகாரளித்த நிலையில், மாணவியை போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த இளைஞர் மாணவியை பாதியிலேயே இறக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மாணவியை மீட்ட போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தில்லைவிளாகம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். ஒரு தலை காதல் விவகாரத்தில் மாணவியை இளைஞர் கடத்தியது தெரியவர, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்