60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் - வெளியான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், 60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலத்தில், தினேஷ்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனம், மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்