கோவில் கருவறைக்குள் நுழைந்து பூசாரியை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, கோவில் கருவறையில் பூசாரியை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சாத்தனூரில் உள்ள ஸ்ரீ மகா சாத்தையா அய்யனார் திருக்கோவிலில் பூசாரியாக வேலை செய்யும் சரவணன் என்பவருக்கும், சக பூசாரியான கண்ணன் என்பவருக்கும் இடையே, கோவில் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவில் கருவறைக்குள் பூஜை செய்து கொண்டிருந்த சரவணனை, கண்ணன் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கண்ணனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்