பிச்சையிடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பிச்சைக்காரர் வேடமணிந்த இளைஞர்கள்

x

பிச்சையிடுவதற்கு எதிராக குமரி மாவட்ட இளைஞர்கள் நூதன பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ் மற்றும் சுனீஷ் என்ற இரண்டு பட்டதாரி இளைஞர்கள், பிச்சைக்காரர் வேஷமிட்டு, பிச்சைக்காரர்களுக்கு பிச்சையிட வேண்டாம் என நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிச்சையிடுவதால், பிச்சை பெறும் நபர் பரம்பரை பரம்பரையாக பிச்சையெடுப்பதாகவும், தங்களது குழந்தைகளையும் பிச்சையெடுக்க பழக்குவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதனை தடுக்கவே யாசகர் இல்லா குமரி, யாசகருக்கு மறுவாழ்வு என்ற இந்த பிரச்சாரத்தை துவக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பிச்சைக்காரர்களுக்கு மாற்று வருமானத்திற்கு வழிவகை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்