தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை... "என் சாவுக்கு டாக்டர்தான் காரணம்" - சிக்கிய பரபரப்பு கடிதம்

x

கேரளா மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரை சேர்ந்த பிரசாந்த் என்பவர், தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு கடந்த 2014 - ல் இருந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

ரஃபிக் என்ற மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்து வந்த நிலையில் தலைமுடி உதிர்வது நிற்கவில்லை.

இதனால் திருமணத்திற்கு பெண் பார்க்கும் திட்டம் முடங்கியது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், தனது இறப்பிற்கு காரணம் மருத்துவர் ரஃபிக் தான் என, கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்