"ரேஸூக்கு வரியா.." போலீசை ரேஸூக்கு அழைத்த இளைஞர் - தீயாய் பரவும் வீடியோ

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கஞ்சா போதையில் சாலையை மறித்து தகராறு செய்த இளைஞர்கள், தட்டிக்கேட்ட காவலரை பைக் ரேஸூக்கு அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருத்தணி பேருந்து நிலையம் அருகே இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், இளைஞர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்த போது, வேகமாக சென்ற இளைஞர்கள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானர்கள். இதில், இளைஞர் ஒருவருக்கு காயம் ஏற்படவே, இரு இளைஞர்களும் சாலையை மறித்து தகராறு செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை காவலர் ஒருவர் செல்போனில் படம் பிடித்த நிலையில், காவலரை ஒருமையில் பேசிய இளைஞர், தான் வைத்திருந்த ஆர்சிபுக், லைசென்ஸ் என அனைத்தையும் சாலையில் வீசி, காவலரை பைக் ரேஸுக்கு அழைக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்