ஹாயாக சூப்பர் மார்க்கெட்டில் திருடிய இளைஞர்...முதல் நாளில் 27 ஆயிரம் லாபம்...! - இரண்டாம் நாள் கதம் செய்த ஊழியர்கள்

x

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, சூப்பர் மார்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக திருட வந்த இளைஞரை, ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த சரண்ராஜ் என்ற இளைஞர், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தான் கொண்டு வந்த பையில் நிரப்பினார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், 2வது நாளாக மீண்டும் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த சரண்ராஜை, ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்