மருதுபாண்டியர் குருபூஜையில் இளைஞர்கள் சாகசம் - பைக், ஆட்டோக்களில் சாகசம் செய்த இளைஞர்கள்

x

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருதுபாண்டியர் குருபூஜையை ஒட்டி, இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் சாகசம் செய்தனர். மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை ஒட்டி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் உருவ சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மாலை செலுத்தி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், இளைஞர்கள் சிலர இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் சாகசம் செய்து கோஷங்களை எழுப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்