தென்னந்தோப்பில் மது அருந்திய இளைஞர்கள்...திடீர் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் - தேனியில் பதற்றம்

x

தேனி மாவட்டத்தில் தென்னந்தோப்பில் மது அருந்தி கொண்டிருந்த இருவர் மீது 10க்கும் மேற்பட்டோர் நடத்திய தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலயே பலியானார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர்கள் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தென்னந்தோப்பில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது, தோப்பினுள் புகுந்த 10 க்கும் மேற்பட்ட கும்பல் நடத்திய தாக்குதலில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த வினோத் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கெங்குவார்பட்டி மற்றும் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரு சமுதாயத்தினர் ஒருவரையொருவர் பகைத்து கொண்ட நிலையில், ஊரில் மூன்றாவது நாளாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்