நண்பருக்காக அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்களை கன்னத்தில் அறைந்த இளைஞர்கள் - பரபரப்பு காட்சி

x

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காவலாளிகள் மற்றும் ஊழியர்களை இளைஞர்கள் மதுபோதையில் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது...

பெரம்பலூர், செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் மது போதையில் தனது நண்பர் ராஜ்குமாருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதனால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும், அவரது உறவினர்கள் பார்க்க சென்றுள்ளனர். அப்போது, பணியில் இருந்த காவலாளி சின்ராஜ் அவர்களை உள்ள அனுப்ப மறுத்த நிலையில், உறவினர்களுக்கும், காவலாளிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித், அவருடைய சகோதரர் ராம்கி மற்றும் ராஜ்குமார் ஆகிய மூவரும் காவலாளி சின்ராஜ் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க வந்த மற்ற ஊழியர்களையும் இளைஞர்கள் தாக்கிய நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்