அக்கா வீட்டில் பிளம்பிங் வேலை பார்க்கவந்த தம்பி...துடிதுடித்து உயிரிழந்த சோகம்

x

குன்றத்தூர் அருகே சுவற்றில் துளையிடும் போது மின்சாரம் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக வந்த அவரது தம்பி ஐயப்பன், சுவற்றில் ட்ரில்லிங் மெஷின் மூலம் துளையிட்டுள்ளார். அப்போது மின்சார ஒயரின் மீது ட்ரில்லிங் மெஷின் பட்டதில் மின்சாரம் பாய்ந்து அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ராஜேஸ்வரி லேசான காயங்களுடன், மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்