மாற்றுத்திறனாளி சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்.. சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார்..

x

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 5-ஆம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.


அப்போது, அதே பகுதியை சேர்ந்த சேஷாத்திரி என்ற இளைஞர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து, மாலை வீடு திரும்பிய பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.


இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், இளைஞர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்