நேருக்கு நேர் மோதிக் கொண்ட 2 கார்கள் - சுற்றுலா சென்ற இளைஞர் பரிதாபமாக பலி

x

கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


விழுப்புரத்தில் இருந்து 6 இளைஞர்கள் ஏற்காட்டிற்கு காரில் சுற்றுலா செல்ல கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

பவானியில் இருந்து காரில் பெண் மற்றும் குழந்தை உட்பட்ட 5 பேர் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்

சுற்றுலா செல்வதற்கு வந்த இளைஞர் பிரசாத் என்பவர் உயிரிழந்தார்.

மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story

மேலும் செய்திகள்